இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

 

 

'தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்' இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

 

நீங்கள் எங்களுடைய இணைய தளத்தை வாசிக்க தெரிந்தெடுத்ததுக்காக உங்களுக்கு நன்றி செலுத்துவதோடு, உங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கும், நீங்கள் தேவனுடன் சஞ்சரிப்பதுக்கும் எமது இணைய தளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

 

எங்களுடைய ஊழியமானது மனித குலத்தின் பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்து பாவத்துக்கான அத்தனை விலக்கிரயத்தையும் செலுத்தி மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுத்த தேவன் இயேசு கிறித்துவின் அன்பினால் இழுக்கப்பட்டு அழிந்து போய்க்கொண்டிருக்கின்ற ஆத்துமாக்களுக்கு தேவனுடைய அன்பை அறிவித்து அவர்களை இயேசுவண்டை கொண்டு வருவதட்க்காக ஆத்தும பாரத்தோடு ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது.


எங்கள் போதனை முற்றிலும் பரிசுத்த வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும் மற்றவர்களின் கருத்துக்களை முட்டால் தனமாய் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் பரிசுத்த வேதாகமத்தை படிக்கவும், நாங்கள் மக்களை ஊக்குவிக்கிறோம்.

 

இந்த தளம் மற்றும் அதன் ஆவிக்குரிய வளங்கள் அனைத்தும் பயன்படுத்துவதற்கும், விநியோகிப்பதற்கும் முற்றிலும் இலவசம்.

'தேவனுடைய வார்த்தையைக் கேட்பது' அனைவருக்கும் இலவசமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.



'ஒவ்வொரு ஆத்மாவின் இரட்சிப்பை' நாங்கள் வாஞ்சிக்கிறோம்.

 

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல (எபேசியர் 2 : 8 - 9) 

 

நம்முடைய தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவில் விசுவாசமுள்ளவர்கள் அல்லது அவரை விசுவாசிக்க விரும்புகிறவர்கள் யாவரும் ஒரு பயணத்தில் இருக்கிறார்கள். நம்மைச் சுற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இருந்தாலும், இது ஒரு தனிப் பயணம், நாம் ஒவ்வொருவரும் தனியாகத் தொடர வேண்டிய தனிப்பட்ட பயணம். சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து, நம் வாழ்வின் இறுதி வரை அல்லது தேவன் இயேசு கிறிஸ்து பூலோகத்துக்கு திரும்பும் வரை அந்தப் பாதையில் இருப்பது மிக முக்கியமானது.

 

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6 )

 

ஜெபம்

பரலோகத் தகப்பனே, நீங்கள் யார் என்பதற்காகவும், நீங்கள் செய்யும் காரியங்களுக்காகவும் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி துதிக்கிறோம். தகப்பனே, எங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் வைத்திருக்கிற உமது உயர்ந்த திட்டங்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தகப்பனே இன்று உமது வார்த்தையைக் கற்றுக்கொள்ள எங்களுக்கு நீங்கள் வழங்கிய வாய்ப்பிற்காக நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே உமக்குளே இன்னுமாக கிட்டிச் சேரவும், நீங்கள் எங்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிற பாதையை தேர்ந்தெடுக்கவும் நீங்கள் எங்களுக்கு உதவி செய்யும் படியாகவும் ஜெபிக்கிறோம், மற்றும் நீங்கள் இன்று எங்களை வழிநடத்தி உமது சத்தியத்துக்குள் நடக்க ஆலோசனைகளையும், . தெளிவையும், ஞானத்தையும் தரும் படியாகவும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமேன்.