நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர் (சங் 77:13&14).


ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

 

பிரியமானவர்களே, இந்த சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரன் கேட்க்கிறார் நம்முடைய தேவனைப் போல் பெரியவர் யார் என்று? ஆம் நாம் ஆராதிக்கிற நம்முடைய தேவன் பெரியவர், அவர் ஒருவரே அதிசயங்களை செய்கிறவர்,  வேதம் சொல்லுகிறது “அவர் பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்” (எரேமி 10 : 12 ) என்று, நம்முடைய தேவன் அவ்வளவு பெரியவர், அவருடைய செயல்களை யாராலும் ஆராய்ந்து பார்க்க முடியாது, அவர் மனிதனுடைய சிந்தைக்கும், அவனுடைய ஞானத்துக்கும் அப்பாட்பட்ட பெரிய காரியங்களை செய்கிறவர், அவர் தான் இயேசு கிறிஸ்து, அவர் தம்மை ஆண்டவராகவும், இரச்சகராகவும் ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு தேவ பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும், அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்து அவருடைய வல்லமைகளை பூலோகத்தில் வாழும் ஜனங்களுக்கூடே விளங்கப் பண்ணுகிறவர், வேதம் சொல்லுகிறது, தேவன் வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்கேனிகளுமாகிறவர் (ஏசா 41 : 18 ). என்று, அவரால் முடியாத காரியம் என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமே இல்லை, அவருக்கு அதிசயமானவர் என்று இன்னொரு பெயருண்டு (ஏசா 9 : 6 ). ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம் அவர் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் தான் ஆண்டவர் என்று, இல்லை பிரியமானவர்களே, அவரை யார் யாரெல்லாம் ஆண்டவர் என்று விசுவாசித்து , கூப்பிடுகிறார்களோ அவர்கள் ஒவ்வொருவருடைய வாழக்கையிலும் அவர் அதிசயங்களை செய்கிறார்.

 

2010 செப்டம்பர் மாதம் நான் இந்துவாக இருந்த நாட்களில் எங்களுடைய ஆபத்து வேளையில் இயேசுவை நோக்கி கதறி அழுத போது அவர் என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய அதிசயத்தை செய்து எங்களை விசாலத்தில் வைத்தார். கடந்த மாதம் கூட என்னுடைய தாயாருக்கு மினி ஹார்ட் அட்டாக் வந்த போது அவரை தேவன் காப்பாற்றியதோடு, அவருடைய பைபாஸ் சத்திர சிகிழ்ச்சையிலும் தேவன் அவருடன் இருந்து பெரிய காரியங்களை செய்தார், அதுமாத்திரமல்ல நான்காம் நாள் வைத்தியசாலையிலிருந்து வீடு செல்லவும் கிருபை செய்தார், ஒவ்வொரு நாளும் எனது தாயார் புதிய பலத்தோடு எழுந்து நடக்கவும் குணமடையவும் தேவன் கிருபை செய்கிறார், அல்லேலூயா !

 

அது மாத்திரமல்ல சில வருடங்களுக்கு முன்பு எனது தகப்பனையும் தேவன் விபத்திலிருந்து பாதுகாத்ததோடு, அவர் குணமடையவும், வேலைக்கு மீண்டும் செல்லவும் தேவன் கிருபை செய்தார், இத்தனைக்கு அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல, இன்னும் இந்து மதத்தவர்கள் தான், ஆனாலும் தேவன் இயேசு தான் அவர்களையும் சிருஷ்ட்டித்தார்.

 

பிரியமானவர்களே, யார் யாரெல்லாமம் அவரை ஆபத்து வேளையில் கூப்பிடுகிறார்களோ, அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் நெருக்கத்திலிருந்து பாதுகாக்கின்றார். சங்கீதம் 91 :14 -15 இவ்வண்ணமாய் சொல்லுகின்றது, “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். அல்லேலூயா !

 

ஆகவே பிரியமானவர்களே, நீங்களும் உங்களுடைய எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் இயேசுவை விசுவாசித்து, அவரை சார்ந்து வாழும் போது உங்களுடைய வாழ்க்கையிலும் அவர் அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்ய அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !

தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.


ஜெபம்

கிருபையின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், போற்றுகிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இந்த நாளில் நீர் எங்களோடு பேசின உமது ஜீவனுள்ள வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன், நீர் எங்களுடைய வாழ்க்கையில் செய்திருக்கிற, செய்து வருகின்ற உமது மகத்துவமான காரியங்களுக்காகவும், எங்களை இரட்சித்து உமது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டதுக்காகவும் கர்த்தாவே உமக்கு நன்றி செலுத்துகிறேன், தகப்பனே நீர் பெரியவர், உம்மை போல் வேறு தேவன் இல்லை, நீர் அதிசயங்களையும், அட்புதங்களையும் செய்கின்ற தேவன் என்பதை நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் ருசித்து பார்த்திக்கிறோம்,. இந்த நாளிலும் யார் யாரெல்லாம் உமது வார்த்தையை வாசித்து உம்மை விசுவாசிக்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையிலும் தேவன் நீர் அதிசங்களை செய்து உமது நாமத்தை மகிமைபடுத்தும்படி உம்மை வேண்டுகின்றேன், மற்றும் இந்த நாளை சந்திக்க எங்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான உமது கிருபையை தந்து எங்கள் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிக்கும் படி உம்மை கேட்கின்றேன். எங்களுடைய விண்ணப்பத்தை கேட்டதட்க்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

 

Rating: 5 stars
1 vote

Add comment

Comments

There are no comments yet.