தேவனுடைய கற்பனைக்குப் பயப்படுகிறவன் பலனடைவான்

Published on 9 January 2023 at 05:00

திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான் (நீதி 13:13)

 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

 

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.


பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க விரும்புகின்றேன்,

 
1) திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்
2) கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்


1) திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான் : 
பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நம்மை இந்த பிரபஞ்சமும், இந்த பிரபஞ்சத்தின் காரியங்களும் ஆளுகை செய்யக் கூடாது, வேதம் சொல்லுகிறது “திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்” என்று. 

ஆகவே பிரியமானவர்களே, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்தாலும், நாம் இந்த பிரபஞ்சத்துக்குரியவர்களல்ல, நாம் தேவனுடைய பிள்ளைகள், பரலோகத்துக்குரியவர்கள் என்பதை மனதில் வைத்து நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் திருவசனத்துக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் . அல்லேலூயா ! 

 

2) கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான் : பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது “கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான் (வாழ்வடைவான்) ” என்று. அல்லேலூயா ! 


ஆகவே பிரியமானவர்களே, இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழ்ந்தாலும் இந்த பிரபஞ்சத்து காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தி விட்டு தேவனுக்கு பயந்து தேவனையுடைய வார்த்தைக்கு,அவருடைய கற்பனைக்கு கீழ்ப்படிந்து நடந்து தேவனுடைய சித்தத்தை செய்து தேவன் எங்களுக்கு வாக்குப் பண்ணியிருக்கிற பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுவோம். அல்லேலூயா ! 

 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.


ஜெபம்

கிருபையின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன், இந்த நாளில் நீர் எங்களோடு பேசின உமது வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன், கர்த்தாவே இந்த பிரபஞ்சத்தில் நாங்கள் வாழ்ந்தாலும் இந்த பிரபஞ்சத்து காரியங்களுக்கு இழுப்புண்டு போகாமல் உமக்கு பயந்து உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்து உமது சித்தத்தை இந்த பூலோகத்தில் செய்து நீர் எங்களுக்கு வாக்கு பண்ணியிருக்கிற பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ள நீர் எங்களுக்கு உதவி செய்யுமாறு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்.


கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

 

Rating: 5 stars
1 vote

Add comment

Comments

There are no comments yet.