இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை (சங் 39:7). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

 

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

 

பிரியமானவர்களே, தாவீது மிகவும் நெருக்கத்தில் இருந்த போது அவர் தேவனை நோக்கி ஜெபித்தார் ஆனால் அவர் எதிர்பார்த்த சில காரியங்கள் வாழ்க்கையில் ஏமாற்றத்தையே கொண்டு வந்தது, அவ்வேளையில் தான் அவர் தேவனை நோக்கி சொல்லுகிறார் “இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை” என்று.


ஆம் பிரியமானவர்களே, தாவீதை போல் உங்களுக்கும் வாழ்க்கையில் அனுபவம் இருந்திருக்கலாம், நீங்கள் நெடு நாளாய் ஜெபித்தும், நம்பின, எதிர்பார்த்த காரியங்கள் உங்களுடைய வாழ்க்கையில் இன்னும் நிறைவேறாமல் உங்களுடைய வாழ்க்கையில் ஏமாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம, இதனால் நீங்கள் சோர்ந்து போயிருக்கலாம், பிரியமானவர்களே, சோர்ந்து போகாதீர்கள். நீங்களும் தாவீதை போல் சோர்ந்து போகாமல் கர்த்தர் மீது தொடர்ந்து உங்களுடைய நம்பிக்கையை வைத்திருங்கள், அவருடைய வேளை வரும் போது நிச்சயமாக அவர் காரியங்களை வாய்க்கப் பண்ணுவார், ஒருவேளை இப்போது நீங்கள் வாழ்க்கையில் தோற்றுப் போனது போல் வெட்கப்பட்டு போனது போல் இருக்கலாம், ஆனால் உம்மை அதுவல்ல இன்னும் கர்த்தருடைய வேளை வரவில்லை, தாவீதை போல் நீங்களும் தொடர்ந்து கர்த்தரை விசுவாசியுங்கள், அவரே எங்கள் நம்பிக்கை, அவர் உங்களை ஒரு போதும் கை விட மாட்டார். அல்லேலூயா !


தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

 

ஜெபம்

கிருபையின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், உம்மை போற்றுகிறேன். நீர் இந்த நாளில் எங்களோடு பேசின உமது வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீரே எங்களுடைய நம்பிக்கை, சூழ்நிலை எங்களுக்கு விரோதமாக இருக்கும் போது மற்றும் எல்லா சூழ்நிலைகளிலும் தாவீதைப் போல் உம்மையே நம்பியிருக்க எங்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டிக்கொள்ளுகிறேன். ஜெபத்தை கேட்டதட்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்.

 

கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

 

Rating: 5 stars
1 vote

Add comment

Comments

There are no comments yet.