புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப் பண்ணும் தேவன்

Published on 17 January 2023 at 05:00

என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை இடைகட்டினீர் (சங் 30:11)

 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

 

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

 

பிரியமானவர்களே, தாவீதுக்கு வாழ்க்கையில் நெருக்கங்களும், பாடுகளும் அதிகரித்துக் கொண்டே போனது, அவரால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு பாடுகள், அந்நாட்களில் அவர் கர்த்தருடைய சமூகத்தில் இரட்டுடுத்திக் கொண்டு துக்க முகத்தோடு கர்த்தரை தேடினார், கர்த்தர் அவருடைய கூப்பிடுதலின் சத்தத்தைக் கேட்டு, தாவீதின் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாற்றினார், மற்றும் அவருடைய இரட்டைட் களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் இடைக் கட்டினார். அல்லேலூயா ! 

 

பிரியமானவர்களே, அதனால் தான் தாவீது பாடுகிறார் “என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை இடைகட்டினீர்“என்று. அல்லேலூயா ! 

 

ஆம் பிரியமானவர்களே, தாவீதின் புலம்பலை ஆனந்தக்களிப்பாகவும், அவருடைய துக்கம் நிறைந்த இருதயத்தை மகிழ்ச்சியினாலும்  இடைக்கட்டின கர்த்தர் நிச்சயமாய் உங்களுடைய  புலம்பலையும் ஆனந்தக்களிப்பாகவும், உங்களுடைய இருதயத்தையும்  மகிழ்ச்சியினாலும் இடைக்கட்ட தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! 

 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 


ஜெபம்

கிருபையின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், போற்றுகிறேன். நீர் இந்த நாளில் எங்களோடு பேசின உமது வார்த்தைக்காக நன்றி செலுத்துகிறேன். வார்த்தையின் படி உமக்கு கீழ்ப்படிந்து உமது சித்தத்தை நிறைவேற்றும் ஒவ்வொருவரையும் நிறைவாய் ஆசிர்வதிக்கும் படி ஜெபிக்கிறேன். விண்ணப்பத்தை உமது பாதத்தில் வைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்.


கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

Rating: 5 stars
1 vote

Add comment

Comments

There are no comments yet.