கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் (நீதி 28:25 )
 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
 
 
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
 
 
பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது, “கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்” என்று.
 
 
பிரியமானவர்களே, நீங்கள் யார் மீது உங்களுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறீர்கள்?
 
 
கர்த்தரை நம்புகிறவனுடைய வாழ்க்கை எவ்வாறு செழித்திருக்கும் என்பதை குறித்து வேதம் இவ்வண்ணமாய் சொல்லுகின்றது, 
 
 
“கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்” (எரேமியா 17:7-8)
 
 
ஆம் பிரியமானவர்களே, நீங்கள் கர்த்தர் மீது உங்களுடைய நம்பிக்கையை வைத்து, உங்களுடைய பாரங்களை, பிரச்சனைகளை எல்லாம் கர்த்தர் மீது இறக்கி வைத்து விட்டு மனஅமைதியோடு ஜீவனம் பண்ணுவீர்களானால் உங்களுடைய வாழ்க்கையும் கனி கொடுக்கிறதுமான மரத்தைப் போல் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும். அல்லேலூயா !


தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
 
 
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
 

 

Rating: 5 stars
1 vote

Add comment

Comments

There are no comments yet.