என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்

Published on 21 January 2023 at 05:00

ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள் (எரேமி 2:32)

 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

 

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

 

பிரியமானவர்களே, “ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்“ என்று கர்த்தர் தன்னுடைய மனப் பாரத்தை, தன்னுடைய கவலையை தீர்க்கதரிசி  எரேமியாவின் மூலமாய்  யூதா ஜனங்களுக்கு கூறுகிறார். 

 

ஆம் பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் கர்த்தரையும், அவர் அவர்களுடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளையும், கிரியைகளையும் வாழ்க்கையில் மறந்து ஜீவித்தார்கள். 

 

பிரியமானவர்களே, யூதா ஜனங்களை போல் நாம் இராமல், எவ்வாறு ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறவாமல் இருக்கிறாளோ அதே போல் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் கர்த்தரை ஒரு போதும் எங்களுடைய வாழ்க்கையில் மறவாமல் இருந்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கனப் பொழுதும் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளுக்காக, அதிசயங்களுக்காக அவரைத் துதித்து ஸ்தோத்தரிப்பதோடு, அவரைக் குறித்தும் அவருடைய கிரியையைகளைக் குறித்தும், அவருடைய மகத்துவங்களைக் குறித்தும் மறவாமல் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டு அவரை ஆராதிக்கிற அவருடைய பிள்ளைகளோடும், அவரை குறித்து அறியாதவர்களுடனும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பேச வேண்டும். அல்லேலூயா ! 

 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

 

Rating: 4.5 stars
2 votes

Add comment

Comments

There are no comments yet.