தேவன் தமது வார்த்தையில் உண்மையுள்ளவராக இருக்கிறார்

Published on 24 January 2023 at 05:00

இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம்பண்ணினீர் (2 சாமூ 7:28)

 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

 

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

 

பிரியமானவர்களே, தேவன் தம்முடைய  வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராக இருக்கிறார், அவர் எதை உங்களுக்கு வாழ்க்கையில் செய்வேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறாரோ அதை அவர் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்றவும் உண்மையுள்ளவராக இருக்கிறார், வாக்கு மறக்க அவர் மனுபுத்திரனல்ல (எண்ணா 23:19). அல்லேலூயா ! 

 

ஆகவே பிரியமானவர்களே, உங்களுடைய சூழ்நிலையை பார்த்து இது என்னுடைய வாழ்க்கையில் எங்கே நடக்கப் போகிறது, சாத்தியமே இல்லை என்று நினைத்து சர்வவல்லவரை உங்களுடைய வாழ்க்கையில் மட்டுப்படுத்தி விட வேண்டாம், வேதம் சொல்லுகிறது மனுஷனால் முடியாதது தேவனானால் கூடும் என்று (லூக் 18:27).அல்லேலூயா ! 

 

பிரியமானவர்களே, ஆபிரகாம், யாக்கோப்பு, தாவீது மற்றும் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிற மற்ற எல்லா பரிசுத்தவான்களின்  வாழ்க்கையிலும் தேவன் எதை செய்வேன் என்று அவர்களுக்கு வாக்குப் பண்ணியிருந்தாரோ அவற்றை தேவன் அவர்களுடைய வாழ்க்கையில் செய்தும் முடித்தார். அல்லேலூயா ! 

 

ஆகவே பிரியமானவர்களே, நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் தேவனையும், அவருடைய வார்த்தையையும் தொடர்ந்து விசுவாசியுங்கள், அவர் உங்களுடைய வாழ்க்கையிலும் உங்களுக்கு செய்வேன் என்று வாக்குப் பண்ணினதை செய்து முடிக்க தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !

 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென் ! 

கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

 

Rating: 5 stars
1 vote

Add comment

Comments

There are no comments yet.