தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் அனுதின மன்னா எபே 6 10
Audio – 1.6 MB 98 downloads

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனம்.

 

என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள் (எபே 6:10 ).


பிரியமானவர்களே, அப்போஸ்தலனாகிய பவுல் எபேசு சபை விசுவாசிகளுக்கு அவர்கள் கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படும் படி இங்கே ஒரு ஆலோசனையை கொடுக்கின்றார்.

 

பிரியமானவர்களே, இந்த பூலோகத்தில் நாம் அநேக போராட்டங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கின்றது, ஆகவே நமக்கு நேரிடுகிற அத்தனை போராட்டங்களிலும் நாம் ஜெயத்தைப் பெறுவதட்கு நாம் கர்த்தராகிய இயேசுவிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்பட வேண்டியதாய் இருக்கின்றது. கர்த்தரே நமது பெலன், அவர் ஒருவரே நமக்குப் போதுமானவர். நாம் வாழ்க்கையில் போராட்டங்களை சந்திக்கும் போது அவற்றை மேட்கொண்டு முன்னேறிச் செல்வதட்க்கு கர்த்தருடைய பெலன் நமக்குத் தேவைப்படுகின்றது. அதனால் தான் தேவனுடைய வசனம் நம்மை உட்ச்சாகப்படுத்துகிறது ‘கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்’ என்று. கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் நாம் பெலப்படும் போது நாம் நமக்கு ஏட்படுகின்றதான போராட்டத்தில் ஜெயத்தைப் பெற்று வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல எங்களால் முடியும். அல்லேலூயா !

 

பிரியமானவர்களே, தாவீது தன் தேனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான் என்று 1 சாமூ 30 : 6 ம் வசனம் சொல்லுகின்றது, தாவீதைப் போல நாங்களும் கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படும் போது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் போராட்டங்களை மேட்கொண்டு முன்னேறிச் செல்ல. எங்களால் முடியும்.

பிரியமானவர்களே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் நீங்கள் பலப்பட நீங்கள் செய்ய வேண்டியதான மூன்று காரியங்கள்,


1 . அவருடைய சமூகத்தில் காத்திருந்து இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் (1தெசலோ : 5:17)

2. அவருடைய சமூகத்தில் காத்திருந்து உபவாசித்து ஜெபிக்க வேண்டும் (மத் 17 : 21 )

3. தேவனுடைய வார்த்தையை இரவும், பகலும் தியானிக்க வேண்டும் (சங்கீதம்: 1:2) அல்லேலூயா !

இவற்றை நீங்கள் செய்யும் போது உங்களுடைய உள்ளான மனுஷனாகிய ஆவிக்குரிய மனுஷன் இன்னுமாய் கர்த்தருக்குள்ளும், அவருடைய சத்துவத்தின் வல்லமையில்லும் பலப்படுவான். அல்லேலூயா !

 

ஜெபம்

அன்பின் பரலோக தகப்பனே உம்மை, ஸ்தோத்தரிக்கிறேன். நீர் இந்த நாளில் எங்களோடு பேசின உமது வார்த்திகைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன். தகப்பனே உம்மிலும், உம்முடைய வல்லமையிலும் இன்னுமாய் நாங்கள் பலப்பட உமது சமூகத்தில் காத்திருந்து ஜெபிக்கவும், உமது வார்த்தையை இன்னுமாய் தியானிக்கவும் எங்களுடைய உள்ளத்தில் விருப்பத்தை போடும் படி ஜெபிக்கிறோம். எங்களுடைய ஜெபத்தைக் கேட்டதட்க்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்.

 

கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

info@godismysalvationministries.com

WhatsApp-ல் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின்  அனுதின தியான வசனத்தைப் பெற +447447913889 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

 

Rating: 5 stars
1 vote

Add comment

Comments

There are no comments yet.