கர்த்தர் நமது அடைக்கலமும், அரணான கோட்டையும்

Published on 6 February 2023 at 05:00

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனம்.


ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார் (யோவே 3:16 b)

 

பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு இந்த பூலோகத்தில் பாடுகளும், உபத்திரவங்களும் உண்டு, ஆனால் நாம் ஆராதிக்கின்ற நம்முடைய கர்த்தர் இயேசு கிறிஸ்து  ஜீவனுள்ளவராக இருப்பதினால் இந்த பூலோகத்தின் பாடுகள் நம்மை ஒரு போதும் மேட்கொள்ளுவதில்லை, கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் அடைக்கலமாகவும், அரணாகவும் இருந்து நம் ஒவ்வொருவரையும் நம்முடைய பிரச்சனைகளிலிருந்து, நம்முடைய உபத்திரவங்களிலிருந்து, நம்முடைய பாடுகளிலிருந்து விடுதலை செய்ய அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !

 

பிரியமானவர்களே, கர்த்தரை எக்காலத்திலும் நம்பியிருங்கள், அவர் ஒரு போதும் உங்களை விட்டு விலகவும் மாட்டார், கை விடவும் மாட்டார். அல்லேலூயா !

 

பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய எங்களுக்கு இந்த பூலோகத்தில் பாடுகளும், உபத்திரவங்களும் உண்டு, ஆனால் நாங்கள் ஆராதிக்கின்ற நம்முடைய கர்த்தர் இயேசு கிறிஸ்து ஜீவனுள்ளவராக இருப்பதினால் இந்த பூலோகத்தின் பாடுகள், உபத்திரவங்கள் எங்களை ஒரு போதும் மேட்கொள்ளுவதில்லை, கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளாகிய எங்கள் ஒவ்வொருவருக்கும் அடைக்கலமாகவும், அரணாகவும் இருந்து நம் ஒவ்வொருவரையும் நம்முடைய பிரச்சனைகளிலிருந்து, நம்முடைய உபத்திரவங்களிலிருந்து, நம்முடைய பாடுகளிலிருந்து விடுதலை செய்ய அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !

கர்த்தர் நமது அரண் கர்த்தர் எப்பொழுதும் நமக்கு அரண். எந்த ஒரு சூழ்நிலையிலும் கர்த்தர் நமக்குப் போதுமானவர். அவர் நம்மை பாதுகாத்து மேலான ஸ்தலங்களில் குடியிருக்கப்பண்ணுகிறவர். ஆதலால் பொல்லாங்கன் நம்மை அசைக்க முடியாது என்பதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கையில் தேவன் இவ்விதமாக செய்வார் என்பதில் உறுதியாய் இரு. இது கர்த்தருடைய வார்த்தை.


ஜெபம்

அன்பின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். நீர் இந்த நாளில் எங்களோடு பேசின உமது வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன். இந்நாட்களில் வாழ்க்கையில சந்திக்கும் போராட்ட்ங்களினால் சோர்ந்து போய் இருக்கும் ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்காகவும், மற்றும் எதிர்ப்புக்களினால் உமது ஊழியத்தை செய்ய முடியாமல் சோர்ந்து போயிருக்கும் ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்காகவும் ஜெபிக்கிறேன், தகப்பனே நீர் சொன்னீரே, பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று, தேவ ஆவியானவர் தாமே சோர்ந்து போய் இருக்கும் உமது ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் உதவி செய்யும் படி ஜெபிக்கிறேன். தகப்பனே எங்களுடைய ஜெபத்தைக் கேட்டதட்க்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்.

 

கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

info@godismysalvationministries.com

WhatsApp-ல் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின்  அனுதின தியான வசனத்தைப் பெற +447447913889 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

 

Rating: 0 stars
0 votes

Add comment

Comments

There are no comments yet.