கர்த்தருடைய ஆவினாலே எல்லாம் ஆகும்

Published on 7 February 2023 at 05:00

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனம்.

 

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (சக 4:6)

 

பிரியமானவர்களே, செருபாபேல் தலைமையில் பாபிலோன் சிறையியிருப்பில் இருந்து திரும்பி வந்த ஜனங்கள் அவருடைய தலைமையில் தேவனுடைய ஆலயத்தை கட்ட  ஆரம்பித்தார்கள் அப்போது அவர்களுக்கு ஆலயத்தைக் கட்டுமான வேலைகளுக்கு தடைகளும், எதிருப்புக்களும் வந்தது, அப்போது செருபாபேல் சோர்ந்து போய் விடுகிறார், எங்கோ தங்களால் ஆலயத்தைக்  கட்டி முடிக்காமல் போய் விடுமோ என்கிறதான சந்தேகமும், பயமும் அவருக்கு வந்தது, அவர் கர்த்தரையும், அவருடைய வல்லமையையும் மறந்து போய் விடுகிறார், இந்த சூழ்நிலையில் தான் கர்த்தர் சொல்லுகிறார் “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று கூறி அவரை உட்ச்சாகப்படுத்துகிறார். அல்லேலூயா ! 

 

ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய ஊழியத்தை செய்கிற உங்களுக்கும் அவருடைய ஊழியத்தை தொடர்ந்து செய்ய முடியாமல் எதிர்ப்புக்களை சந்திக்கிறீர்களா? சோர்ந்து போகாதீர்கள். கர்த்தர் உங்களை அவருடைய வேலையை செய்யும் படி அழைப்பாரென்றால் நிச்சயமாக உங்களோடு இருந்து தடைகளை முறியடித்து, எவ்வாறு செருபாவேலுடனும், ஆலயத்தைக் கட்டுகிற கட்டுமான வேலையில் ஈடுபட்ட மற்ற யூத ஜனங்களோடும் இருந்து ஆலயத்தைக் கட்டி முடிக்க  உதவி செய்தாரோ அதேபோல் உங்களுக்கும் அவருடைய ஊழியத்தை செய்து முடிக்க உதவி செய்வார். அல்லேலூயா ! 

 

பிரியமானவர்களே, கர்த்தருடைய ஊழியத்தை செய்ய மனித பெலமோ, மனுஷனுடைய பராக்கிரமோ தேவையில்லை, மாறாக அவருடைய ஆவியே நமக்குத் தேவையாக இருக்கின்றது. ஒருவேளை சூழ்நிலையைப் பார்த்தால் சாத்தியமில்லாதது போல் தோன்றலாம், ஆனால்  கர்த்தருடைய ஆவியினால் நாம் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியும், அல்லேலூயா ! 

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.


என்னையல்லாமல் (இயேசு) உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (யோவா 15:5 )

 

ஜெபம்

அன்பின் பரலோக தகப்பனே, உம்மை துதிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். நீர் இந்த நாளில் எம் ஒவ்வொருவருடன் பேசின உமது ஜீவனுள்ள வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தகப்பனே அழைத்தவர் நீர் உண்மையுள்ளவராக இருப்பதட்க்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். உமது ஊழியத்தை தொடர்ந்து செய்ய பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும் படி ஜெபிக்கின்றோம். எங்களுடைய விண்ணப்பத்தை நீர் கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பதட்க்காக உமக்கே நன்றி செலுத்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

 

மின் அஞ்சலில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தைப் பெறinfo@godismysalvationministries.com என்ற விலாசத்துக்கு  தொடர்பு கொள்ளவும்.


WhatsApp-ல் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தைப் பெற +447447913889 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

 

தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனம், வேத பாடம் மற்றும் தேவ செய்திகளை YouTube-ல் பார்க்க, கேட்க நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

 

Rating: 5 stars
1 vote

Add comment

Comments

There are no comments yet.